Home > Work > நாக படை [Naaga Padai]

நாக படை [Naaga Padai] QUOTES

1 " அந்த பையனுக்கே உங்க பொண்ண கொடுக்கறேன்னு சொல்லி பாருங்களேன்.” “இது என்ன விஷப் பரீட்சை…?” “விஷத்தால தானே இவ்வளவு நாளுமே நீங்க பாதிக்கப்பட்டிருக்கீங்க. அதுல இருந்து விடுபடணும்னா தீர்க்கமா ஒரு வி,ப்பரிட்சைல நீங்க இறங்கித்தான் தீரணும்!” “என்னம்மா நீங்க… என் பெண்ணை மருமகளா அடைய அவருக்கு கசக்குமா… மறு வார்த்தை பேசாம அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்த வச்சுக்கலாம்னு தாம்மா சொல்வாரு…” “சொல்லட்டும்… கூடவே நாங்க பெண் கேட்டோம்னும் ஒரு வார்த்தை சொல்லுங்க…” “இது எதுக்கு…?” “அப்ப தானே எங்களை கொல்ற முடிவுக்கு வருவார்…” “இது என்ன விபரீத விளையாட்டு…” “விளையாட்டு இல்லை… இது ஒரு வித வலை. குற்றவாளியா தேடி வந்து வலைல விழ வைக்க செய்யற ஒரு முயற்சி…” “அம்மா… போதும்மா… நீங்க இனி எதையும் பேச வேண்டாம். நான் பாத்துக்கறேன். நீங்க போட்ட கோட்டுல நான் ரோடே போட்டுக் காட்றேன்…” கருணாகரன் ஒரு புதிய உற்சாகத்தை காட்டினான். ஜமீன்தார் துரைசிங்கமோ சாரதாவின் "

Indra Soundar Rajan , நாக படை [Naaga Padai]